ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு சிலுக்கன்பட்டி ஶ்ரீ செல்வ விநாயகர் தசரா குழு நடத்தும் காளிபூஜையில் அன்னதானம் வழங்கும் விழா
Sep 27 2025
25

எம்.ஆர்.வி.கவியரசன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு சிலுக்கன்பட்டி ஶ்ரீ செல்வ விநாயகர் தசரா குழு நடத்தும் 15ம் ஆண்டு காளிபூஜை மற்றும் பூமிதி திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் நகர் மன்ற உறுப்பினருமான எம்.ஆர்.வி.கவியரசன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஶ்ரீ செல்வ விநாயகர் தசரா குழுவினர் சூரன், மாரிமுத்து, சங்கர்கணேஷ், மாரிச்செல்வம், லிங்கசாமி, கண்ணன், சக்திகனி, வள்ளியம்மாள் ஆகியோர் வரவேற்றனர். இதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முறம்பன் சுடலைமணி, அதிமுக நிர்வாகிகள் எம்.ஆர்.வெள்ளைச்சாமி, வழக்கறிஞர் முருகன், கவர்னகிரி சிவக்குமார், சுடலைமாடன், முனியசாமி, இன்ஜினியர் அமிர்தராஜ், சூரியா, தினேஷ்குமார், ராகுல், அம்பானி, ஆதி சக்தீஸ்வரன், ராஜரிஷி, செல்வம், மீனாட்சி மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை தசரா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?