
*🌹✍️இனிப்பு*
*தீபாவளி*
*பொங்கல்*
*ரம்ஜான்*
*கிறிஸ்துமஸ்*
*என*
*எது வந்தாலும்*
*எனக்குத்*
*தவறாமல் கிடைப்பது*
*உன்*
*மு த் த ங் க ள் தா ன்!*
*🌹✍️தனியழகு*
*உன்*
*திருக் குரலால்*
*கேட்கும் போது*
*திருக்குறள் கூட*
*தனி அழகாக இருக்கிறதென்று*
*மிகைப்படுத்திச் சொல்கிறாய்!*
*உனக்கு தான்*
*என் மீது*
*என்ன அதீதமான*
*கா த ல்!*
*🌹✍️தென்றல்*
*நீ*
*வரும் போது*
*வீசும் காற்று மட்டும்*
*எந்த திசையிலிருந்து*
*வந்தாலும்*
*அது*
*தென்றலாகவே மாறி விடுகிறது!*
*🌹✍️களவாணி(யே!)*
*என்*
*உள்ளம் கவர்ந்த கள்வி*
*நீ!*
*ஆனால்*
*ஒவ்வொரு முறை*
*சந்திக்க வரும் போதும்*
*என்*
*கன்னம் கிள்ளிக்*
*களவாணி என்று கொஞ்சுகிறாய்!*
முத்து ஆனந்த்
வேலூர்*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?