கவிதைகள்.

கவிதைகள்.


*🌹✍️மன்னிப்பு*


*உண்மையான*

*கா த ல ர் க ளு க் கு ள்*

*மட்டுமே*

*ஏராளமான பொய்கள்*

*மன்னிக்கப்படுகின்றது!*



*🌹✍️திருமதி*


*கா த லி க் கு ம் போ தே*

*நீ*

*உன்*

*வலது காலை*

*எடுத்து வைத்து*

*என்*

*இ த ய த் தி ற் கு ள்*

*வந்ததால்*

*அப்பொழுதே*

*என்*

*திருமதியாகி விட்டாய்!*



*🌹✍️தீபம்*


*நீ*

*உன்*

*அன்பால்*

*விளக்கேற்றுகிறாய்!*

*தீபச் சுடராய்*

*எரிகிறது*

*நம்*

*கா த ல்!*



*🌹✍️களிப்பு*


*கோயிலில்*

*எம்பி எம்பி*

*மணியடிக்கிறாய்!*

*அதை ரசிக்கும்*

*என்*

*மனமோ*

*துள்ளித் துள்ளிக்*

*களிக்கிறது!*



*🌹✍️இசை*


*என்*

*விழிகளில்*

*நீ*

*விழும் போதெல்லாம்*

*சங்கீதம்*

*இசைத்துக் கொள்கிறது*

*என் மனம்!*



*🌹✍️பட்டாம் பூச்சி மனசு*


*வண்ணத்துப் பூச்சியைத்*

*துரத்திக் கொண்டு*

*தொடர்கிறாய்!*

*அதை ரசிக்கும்*

*என்*

*மனமோ*

*வண்ணத்துப் பூச்சிக்குத்*

*துணையாகப் பறக்கத் தொடங்குகிறது!*



*🌹✍️விடியல்*


*விடியல்*

*கொஞ்சம் கொஞ்சமாய்*

*எட்டிப் பார்க்கிறது!*

*இன்னும் உறங்காமல்*

*விழித்துக் கொண்டு தான்*

*இருக்கிறோம்!*

*நீ யு ம்*

*நா னு ம்*

*கா த லு ம்!*


*முத்து ஆனந்த்

வேலூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%