காலச்சூழலுக்கு ஏற்ப திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” - மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

காலச்சூழலுக்கு ஏற்ப திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” - மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை


 

சென்னை: ​மாறிவரும் காலச்​சூழலுக்​கேற்ப புதிய திறமை​களை வளர்த்​துக்​கொள்ள வேண்​டும் என்று பொறி​யியல் பட்​ட​தா​ரி​களுக்கு இஸ்ரோ செயற்​கைக்​கோள் மைய முன்​னாள் இயக்​குநர் மயில்​சாமி அண்​ணாதுரை அறி​வுரை வழங்​கி​னார்.


அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் 46-வது பட்​டமளிப்பு விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. பல்​கலைக்​கழக வேந்​தரும் தமிழக ஆளுநரு​மான ஆர்​.என்​.ரவி தலைமை வகித்​தார். பல்​கலைக்​கழக அளவில் முதலிடம் பிடித்த மாணவ-​மாணவி​களுக்கு ஆளுநர் பதக்​கங்​களை​யும் பட்​டங்​களை​யும் வழங்​கி​னார். பிஇ, பிடெக்., எம்இ, எம்​டெக். உள்​ளிட்ட படிப்​பு​களில் 1 லட்​சத்து 50,595 பேருக்கு பட்​டங்​கள் வழங்​கப்​பட்​டன.


இவ்​விழா​வில் இஸ்ரோ செயற்​கைக்​கோள் மைய முன்​னாள் இயக்​குநர் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை பேசி​ய​தாவது: நாம் அடைவதை விரும்​புவதும் வெற்​றி​தான்​. பள்​ளிக்​காலம் தொட்டு நான் விரும்​பியவை எனக்கு கிடைக்​க​வில்​லை. கிராமத்து அரசு பள்​ளி​யில் படித்​தேன். எனக்கு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு பணி​யில் சேர ஆசை. ஆனால், இஸ்​ரோ​வில் செயற்​கைக்​கோள் திட்​டத்​தில் பணி கிடைத்​தது. விரும்​பிச் செய்​த​தால், நில​வுக்கு வெற்​றிகர​மாக அனுப்​பப்​பட்ட சந்​திர​யான்-1 விண்கலத் திட்​டத்​துக்கு தலைமை தாங்கி வழி நடத்​தினேன். நாம் விரும்​புவது கிடைக்​கா​விட்​டாலும் கிடைப்​பவற்றை விரும்​பிச் செய்​தால் அது​வும் வெற்​றி​தான்.


எனவே கிடைக்​கின்ற வாய்ப்​பு​களை நன்கு பயன்​படுத்​திக் கொள்​ளுங்​கள். விண்​வெளித்​துறை சாதனை​யாளர்​களில் 90 சதவீதம்​பேர் அரசு பள்​ளி​யில் அது​வும் தமிழ்​வழி​யில் படித்​தவர்​கள் தான். மாறிவரும் காலச்​சூழலுக்கு ஏற்ப புதிய திறமை​களை வளர்த்​துக்​கொள்ள வேண்​டும். வாழ்​நாள் முழு​வதும் கற்​றுக்​கொண்டே இருக்க வேண்​டும். உலகப் பொருளா​தார மன்ற ஆய்​வின்​படி 2030-க்​குள் கோடிக்​கணக்​கான வேலை​வாய்ப்​பு​கள் காணா​மல் போகும். அதே​நேரம் அதே அளவுக்​கான புதிய வேலை​வாய்ப்​பு​களும் உரு​வாகும். எனவே, புதிய பணி​களுக்கு நம்மை தகு​திப்​படுத்​திக்​கொள்ள வேண்​டியது அவசி​யம். இவ்​வாறு கூறி​னார்.


முன்​ன​தாக, பல்​கலைக்​கழகஒருங்​கிணைப்​புக்​குழு​வின் தலை​வரும், உயர்​கல்​வித் துறை​யின் செயலரு​மான பொ.சங்​கர் பேசும்​போது, “அண்ணா பல்​கலைக்​கழகத்தை உலகத்​தரத்​துக்கு மேம்​படுத்​தும் வகை​யில் ஒருங்​கிணைக்​கப்பட்ட ஆய்​வகங்​கள், செயற்கை நுண்​ணறிவு கட்​டமைப்​பு​கள், ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுப் பணி​களுக்​காக தமிழக அரசு ரூ.1,380 கோடிவழங்​கி​யுள்​ளது” என்​றார்.


விழா​வில், பல்​கலைக்​கழக பதி​வாளர் வி.குமேரசன், தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் பி.சக்​திவேல் மற்​றும் பேராசிரியர்​கள், மாணவ-​மாணவி​கள், பெற்​றோர்கலந்​து​கொண்​டனர். பல்​கலைக்​கழகங்​களின் துணைவேந்​தர் நியமனத்​தில் தமிழக அரசுக்​கும் ஆளுநருக்​கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலை​யில், இணைவேந்​தரும், உயர்​கல்வி அமைச்​சரு​மான கோவி.செழியன் பல்​கலைக்​கழக பட்​டமளிப்​பு விழா​வில்​ பங்​கேற்​காமல்​ புறக்​கணித்​தார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%