
" பிறப்புக்கும்
இறப்பிற்கும்
நடுவில்
பெரும் போராட்டம் ... "
தூங்குவது இல்லை
இதயம் உதயமான
பீரங்கிகள் வலம்
வரும் எக்காலமும் ....."
போர் அவசரகால
நிலை அழுகுரல்
பசி பஞ்சம்
பட்டினி ......"
ஏவுகணைகள்
தாக்கி தாக்கி
ஏலத்திற்கு வந்தது
மனிதம் .... "
உயிர்கள் பலி
நாடு நகரம்
நாசம் அகதிகளாய்
மக்கள் ..."
இன்னும் பிற்போக்கு
சிந்தனை ,காலம்
மாறினாலும் காட்சிகள்
மாறவில்லை ..."
அதிகாரம் காட்டும்
ஆதிக்கம் அடங்காத
இரத்தத்தை உறிஞ்சும்
ஒட்டுண்ணி ... "
அமைதியை தேடியே
உலகம் , வெள்ளைக்
கொடிக்கு உண்டு
மகத்துவம் .... "
உலகம் சமநிலை
பெற வேண்டும்
அதில் உயர்வு
தாழ்விலா நிலை
வேண்டும் ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
9842371679 .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?