சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
Dec 05 2025
26
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரி யார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 விருது தொகை யும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப் படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப் படுகிறார். 2025 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப் படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்க ளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப் பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனை கள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத் தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம். தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணி கள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2025 ஆம் ஆண்டிற்கு சமூக நீதிக் கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 18.12.2025 என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?