சிறந்த கைவினைஞர்களுக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருது; பூம்புகார் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சிறந்த கைவினைஞர்களுக்கு ‘வாழும் கைவினைப் பொக்கிஷம்’ விருது; பூம்புகார் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, செப் 16–


வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 7 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 10 சிறந்த கைவினைஞர்களுக்கும் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 7 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, திறன் மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.


2024–-2025–ம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகளை - கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ந.ராணி வின்சென்ட் (இயற்கை நார் பொருட்கள்) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி. வீழிநாதன் (உலோக தகட்டு வேலை), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசி சொக்கர் (மியூரல் ஓவியம்), திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குப்பு சுப்பிரமணி (கற்சிற்பம்),


கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த து. ரமணி (துணி பொம்மைகள்), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த என். பூவம்மாள் (சித்திரத்தையல்) மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ந.துரைராஜ் (மரச்சிற்பம்) ஆகிய 7 விருதாளர்களுக்கு முதலமைச்சர் வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதிற்கான தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.


பூம்புகார் மாநில விருது


2024–-2025–ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை - தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெ. வெங்கட்ராமன் (பஞ்சலோகசிற்பம்) மற்றும் சி.ரமேஷ் (தஞ்சாவூர் ஓவியம்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மு.குப்புசாமி (தஞ்சாவூர் ஓவியம்), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி. கோபாலகிருஷ்ணன் (மரச்சிற்பம்),


கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த க.முருகன் (மரச்சிற்பம்), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரா. ஹரிகிருஷ்ணன் (சுடு களிமண் சிற்பம்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செ.ரஹ்மத் மீராள் பீவி (பாய் நெசவு), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சி.ஸ்ரீகுமாரி (இயற்கைநார் பொருட்கள்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பா. மேகன்டூ (ஆணி நூல் கலை) மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரா. கோகுல்நாத் (நெட்டி வேலை) ஆகிய 10 கைவினைஞர்களுக்கு முதலமைச்சர் பூம்புகார் மாநில விருதிற்கான தலா 4 கிராம் தங்கப் பதக்கம், 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகை, தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.


இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கதர்த்துறை செயலாளர் வே.அமுதவல்லி, கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சு.அமிர்த ஜோதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%