news Breaking News
clock

தஞ்சாவூர் – தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம்: ஸ்டாலின் அடிக்கல்

தஞ்சாவூர் – தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம்: ஸ்டாலின் அடிக்கல்



சென்னை, பிப். –


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அருங்காட்சியகத் துறையால் தஞ்சாவூர் – தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கரில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாபெரும் சோழர் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். சோழர்களின் மகத்தான பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், சோழர் காலக் கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைகளுக்காக காட்சிப்படுத்தும் நோக்கில், 2023–24–ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


இம்மாபெரும் சோழர் அருங்காட்சியகத்தில், பண்பாடு மற்றும் வரலாற்றுச் சிறப்பு, சங்ககாலச் சோழர்கள், சமயங்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு, நிருவாகமும் ஆட்சிமுறையும், கட்டடக்கலைச் சிறப்பு, நகரமைப்பு, நீர்மேலாண்மை, நில மேலாண்மை, கலை மற்றும் பண்பாடு (சோழர் கால செப்புப் படிமங்கள் மற்றும் கற்சிற்பங்கள்), சமூக வாழ்வு, பொருளாதாரம், இலக்கியம், கடல்கடந்த வாணிபம், வெளிநாட்டுப் படையெடுப்புகள், கடற்படை வலிமை மற்றும் இராணுவத் திறன் ஆகிய தலைப்புகளில் தனித்தனி காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.


மாபெரும் சோழர் அருங்காட்சியகம், சோழர் கால பண்பாட்டு முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பண்பாட்டு மையமாகவும், கல்வி, ஆய்வு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முன்னோடி மையமாகவும் அமைக்கப்பட வுள்ளது.


இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுலா துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், அருங்காட்சியகத் துறை இயக்குநர் கவிதா ராமு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News