பழையன கழிதலும்,
புதியன புகுதலும் –
வழி வழி வந்த
வழக்க மன்றோ!
முதிரும் பருவம்,
உதிரும் சருகாய்
அசையென நினைவுகள் –
அலையென ஆயிரம்.
இனிதென நினைத்தவை
கரைவதை அறிவோம்;
இனி அவை வருமோ? –
ஏங்குதல் இயல்பே.
மனநிலை யாவும்
மாறிட வேண்டும்;
மாற்றம் நாடிடும்
தலைமுறைகள் கூடி.
புதுமை பல பல
தேடுதல் இயற்கை;
செயற்கை அறிவின்
ஜனனம் கண்டோம்.
இனிதான் வருமே
அறிவியல் ஆட்டம்.
தோற்றோம் என நாம்
ஒரு கணம் நினையோம்.
ஏற்போம் எதையும்
இனிதென அமைய –
கால ஓட்டத்தில்
இணைந்திடுவோமே

— சுந்தர மணிவண்ணன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%