திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று
(29.09.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கிவருகிறார்கள். அதன்படி இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மைதுறை சார்ந்த பயிர்க்கடன்கள், புதியநீர் தேக்கதொட்டி அமைத்துதருதல், தாட்கோ மூலம்கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 825 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் பெண்கள், வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெறுவதோடு, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாண அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதனை தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக 7 பயனாளிகளுக்கு நவீன செய்கை அவயங்கள் ரூ. 681100 மதிப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 60 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 79 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம்
வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.இராம்பிரதீபன்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.மணி, மாவட்ட
மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் திருமதி.மலாதி அவர்கள் மற்றும் அனைத்து
துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.