தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி: ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி: ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்


புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது தீப உற்​சவம் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை உ.பி. அரசு சார்​பில் அயோத்​தி​யின் ராம் மனோகர் லோகியா அவத்

பல்​கலைக்கழகம் நடத்​துகிறது.


இதில், 29 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​முலம் கடந்த ஆண்​டின் (26 லட்​சம் அகல் விளக்​கு​கள்) சாதனை முறியடிக்​கப்பட உள்​ளது. இவ்​விளக்​கு​கள் சரயு நதி​யின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்​கள் மற்​றும் குடி​யிருப்​பு​களில் ஒளிர உள்​ளன. தீபாவளிக்கு தமிழகத்​தில் நரகாசுரன் காரண​மானதைப் போல், உ.பி.​யில் ராமர் போருக்​குப் பின் அயோத்தி திரும்​பியதன்

நினை​வாக தீபாவளி பண்​டிகை கொண்​டாடப்​படு​கிறது. மேலும் 1,100 டிரோன்​கள் வானில் தீபாவளிக்​காக பறக்​க​விடப்பட உள்​ளன. இவற்​றில் ராமாயணத்​தின் காட்​சிகள் ஒளிப்​படங்​களாக சித்​தரிக்​கப்பட உள்​ளன.


இதுகுறித்து மாநில சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் ஜெய்​வீர் சிங் கூறும்​போது, “அயோத்​தி​யின் வெறும் தீபாவளி திரு​நாள் விழா​வாக அன்றி ஆன்​மிகம், நம்​பிக்​கை, கலாச்​சா​ரம் உள்​ளிட்​ட​வற்​றின் மெகா விழா​வாக கொண்​டாடப்பட உள்​ளது. இந்த வருட​மும் தீபாவளிக்கு வரும் வெளி​நாட்​ட​வர்​கள் இடையே இது சர்​வ​தேச அளவில் இந்​தி​யா​வின் கலாச்​சா​ரத்தை வெளிப்​படுத்​தும். இதைக் காண வரும் லட்​சக்​கணக்​காக பொது​மக்​களுக்​காக அயோத்​தி​யில் சிறப்பு போக்​கு​வரத்​துடன் பாது​காப்​பு​களும் பலப்​படுத்த உள்​ளன” என்​றார்.


அயோத்​தி​யின் தீபாவளி நிகழ்ச்​சிக்​காக உ.பி. அரசு வழக்​கம் போல், தன்​னார்​வலர்​கள் உதவியைப் பெற முடிவு செய்​துள்​ளது. இப்​பணிக்கு வர விரும்​புபவர்​கள் மாநில அரசின் இணை​யதளத்​தில் சுய​விவரங்​களைப் பதிவு செய்​ய​லாம். இதில் தமிழ்​நாட்​டிலிருந்​தும் பலர் தன்​னார்​வலர்​களாகப் பணி​யாற்ற விருப்​பம் தெரி​வித்து பதிவு செய்​துள்​ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%