தீபாவளி சிறப்பு பதிவு

தீபாவளி சிறப்பு பதிவு


💥💥💥💥💥💥💥

தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. எவ்வாறு கொண்டாட வேண்டும் என்றும் அதன் விசேஷங்கள் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக 🔥தீபாவளி🔥 எனும் வட மொழி சொல்லுக்கு தீப ஆவளி என்று பொருள் ஆவளி என்றால் வரிசை என்று பொருள். ஆக தீபங்களை வரிசையில் வைப்பது தீபாவளி.

அந்த வகையில் வருகிற

🔥💠17-10-2025 வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பிரதோஷ காலத்தில் கன்றுடன் கூடிய பசுவை பூஜிக்க வேண்டும். இதற்கு கோ வத்ஸ துவாதசி என்று பெயர்.💠🔥 வத்சலா என்றால் குழந்தை என்று பொருள். பொதுவாக எந்த ஒரு பெரிய அளவிலான பண்டிகை கொண்டாட வேண்டும் என்றாலும் முதலில் கோ பூஜை செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகை என்பது நரகாசுரன் எனும் தன் மகனை பூமா தேவியின் அம்சமான சத்யபாமா ஸ்ரீ கிருஷ்ணர் முன்னிலையில் சம்ஹாரம் செய்த தினமாகும். எனவே கன்றுடன் கூடிய பசுவை இன்று வழிபடுவதால் நம் குழந்தைகள் சொல்படி கேட்டு நடக்கும் நல்ல பிள்ளைகளாக வளருவார்கள். இன்று ஒரு நாளாவது பசும்பால், தயிர் உணவில் தவிர்க்க வேண்டும். பால் முழுவதும் அல்லது போதுமான அளவு கன்றுக்குட்டி குடிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் நம் குழந்தைகள் நல்ல வழியிலும் சொல் பேச்சு கேட்டும் நல்லவர்களாகவும் வளருவார்கள்.

🔥💠18-10-2025 சனிக்கிழமை மாலையில் யம திரயோதசி (யம தீபம்)💠🔥.

 கடந்த ஒரு மாதம் முன்பு மஹாளய பக்ஷ காலம் இருந்திருக்கும்.

அப்போது எம லோகத்திலிருந்து வந்திருந்த நம் முன்னோர் நினைவாக நாம் தர்ப்பணம் செய்திருப்போம்.

அவர்கள் மீண்டும் யம லோகம் செல்ல அவர்களுக்கு செல்லும் பாதையில் வெளிச்சம் காட்ட தென் திசை நோக்கி வீட்டிற்கு வெளியே, வாசலில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் அல்லது குறைந்தது 5 தீபம் மாலை நேரத்தில் தெற்கு நோக்கி வீட்டிற்கு வெளியே வாசலில் வைக்க வேண்டும். இதனால் வருகிற அந்த வருடம் முழுவதும் முன்னோர்களது ஆசியினால் வீட்டில் உள்ளோருக்கு பெரிய அளவில் நோய் உண்டாகாது. அறிவியல் படி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சூரியனின் வெளிச்சம் குறைவாக பகல் பொழுது குறைந்து இருக்கும். ஜோதிட ரீதியாக சூரியன் நீசம் பெறும் போது கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் கொசு வைரஸ் போன்ற நுண்கிருமிகள் அதிகம் உற்பத்தி ஆகி அதனால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும். இதனை தவிர்க்க தினசரி மாலையில் தீபம் வைக்க வேண்டும். 

மேலும் பண்டிகை காலங்களில் அதிக இனிப்பு பதார்த்தங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் நோய் விலக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் அடுத்த 5 நாட்களும் தீபம் வைக்க வேண்டும். 

🔥💠தன்வந்திரி ஜெயந்தி💠🔥

இன்று மருத்துவ கடவுளான தன்வந்திரி பகவானை வழிபட நெடிய நோய்கள் குணமாகும். ஆரோக்கியம் மேம்படும். மேலும் ஐப்பசி மாதம் வருகிற திரயோதசி

 🔥💠தனதிரயோதசி 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை 💠🔥. பண்டிகைக்கான பொன் ஆபரணங்கள் புதிய துணிமணிகள் வாங்கி கொள்ள சிறந்த நாள்.பொதுவாக அக்ஷய திருதியை விட இன்று நகைகள் வாங்குவது உத்தமம். 

🔥💠நரக சதுர்தசி யம சதுர்தசி ஸ்நானம்💠🔥

 20-10-2025 திங்கட்கிழமை அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன்பே எழுந்து நல்ல எண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணையில் உடல் முழுதும் தேய்த்து அதில் வாசனை திரவியங்கள் அக்தர் ஜவ்வாது, புஷ்பங்கள் போன்றவை கூட சேர்த்து கொண்டு வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கங்கையில் நீராடிய புண்ணியம் உண்டாகும். 

வெந்நீரில் எண்ணெயிலும் லக்ஷ்மீயும் கங்கையும் வாசம் செய்கிறார்கள் என்பது ஐதீகம்.இந்த ஸ்னானத்தை கங்கா ஸ்னானம் என்றே அழைப்பர். அதில் நாயுருவி இலை, சுரைக்காய் கொடி இலை போன்றவை கொண்டு தலையை சுற்றி போட்டு விட்டு, குளிக்க வேண்டும். வெந்நீரில் சேர்த்து கொள்ளலாம். இதனால் லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும்.இதன் பொருள் என்ன என்றால் பொதுவாக சூர்ய உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்து வர கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்த நரக சதுர்தசியில் மட்டும் செய்யலாம். இதனால் ஆரோக்கியம் உண்டாகும்.உடல் சூடு குறையும். அதனால் வியாதிகள் நீங்கும்.மருத்துவ செலவுகள் குறையும், சேமிப்பு உண்டாகும் அது தான் லக்ஷ்மீ கடாக்ஷம். இவ்வாறு குளித்து விட்டு சூரிய உதயத்தில் கிழக்கு நோக்கி இருந்து கொண்டு யமனுக்கும் சித்ர குப்தனுக்கும் யம தீர்த்தம் என தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை தாய் தந்தை உள்ளவர் இல்லாதவர் என அனைவரும் செய்யலாம். ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டு உள்ளது.திதிக்கு சூர்ய சந்திரர்கள் மட்டுமே முக்கியம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம். 

இவ்வாறு சதுர்தசியில் குளித்து விட்டு 🔥யம தர்ப்பணம்🔥 செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும்.

🔥💠20-10-2025 திங்கட்கிழமை💠🔥 தீபாவளி* அன்று மாலையில் அமாவாசை இருக்கிறது. அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து சுக்கிரனின் ராசி வீடான துலாம் ராசியில் உள்ள நாள். அதனால் அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் லஹ்மி குபேர பூஜை செய்ய வேண்டும். லக்ஷ்மீ குபேர படம் அல்லது கலசம் வைத்து 21 எண்ணிக்கையில் அரளி மொட்டு அரளி இலை அப்பம் பக்ஷணம் வைத்து முந்தைய நாள் வாங்கிய ஆபரணங்கள் கொண்டு தன்னை நன்கு அலங்காரம் செய்து கொண்டு வீட்டில் உள்ள நகைகளை பூஜையில் வைத்து அலங்காரம் செய்து வழிபட வேண்டும். 

🔥💠 21-10-2025 செவ்வாய்க்கிழமை கேதார கௌரி விரதம்💠🔥சிவனுக்கு கேதாரேஸ்வரர் என்கிற திருநாமம் உண்டு.அன்னை பார்வதி தேவி இருந்த விரதம் ஆகையால் கேதார கௌரி விரதம் என்பார்கள். இன்று வீட்டில் கலசம் வைத்து 21 முடிச்சு உள்ள மஞ்சள் சரட்டை வைத்து கலசத்துக்கு அலங்காரம் செய்து 21 எண்ணிக்கையில் பழம், வெற்றிலை பாக்கு, அப்பம் போன்றவை வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் சுமங்கலி பெண்கள் தன் வலது கையில் சரடை கட்டி கொள்ளவும்,21 சுமங்கலி பெண்களுக்கு தானம் செய்யவும். இதனால் குடும்பத்தில் எப்போதும் இடர்கள் வராது, ஒற்றுமையும் சந்தோஷமும் நிலைத்து நிற்கும். இன்று மாலை நேரத்தில் உல்காதனம் செய்ய வேண்டும். உல்கா என்றால் எரியும் நெருப்பு கட்டை.பொதுவாக கம்பளி ஆடைகளை ஏழை எளியோர்க்கு தானம் செய்ய வேண்டும். ஏனென்றால் துலா ராசியில் தான் சனி உச்சம் பெறுகிறது. மேலும் அறிவியல் படி அடுத்து பனிக்காலம் ஆரம்பிக்கிறது.

எந்த ஒரு பண்டிகையும் நாம் மட்டும் சந்தோஷபடுவதற்காக உண்டாக வில்லை. நம்மை சுற்றி உள்ளோரை சந்தோஷப்படுத்தவும் உண்டாகி உள்ளது என்கிற வகையில் ஏழை எளிய மக்களுக்கு தான தர்மம் செய்து கொள்ள வேண்டும்.

🔥💠22-10-2025 புதன்கிழமை கார்த்திக சுத்த பிரதமை💠🔥. இன்றய தினம் முதல் சாந்திரமான முறையில் கார்த்தீக மாதம் துவங்குகிறது. பொதுவாக அன்று கார்த்திக மாதம் முதல் நாள். பொதுவாக ஜோதிட ரீதியாக கால புருஷனுக்கு மறைவு ராசியான விருச்சிக மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வருவது நல்லது.எந்த பாவத்தின் பலனும் அதன் ஏழாம் பாவம் குறிகாட்டும்.அதன் படி விருசிகத்திற்கு 7ம் பாவத்தில் தான் கார்த்திகை நக்ஷத்திர மண்டலம் உள்ளது.அதன் உருவம் ஜோதி சுடர் வடிவம்.எனவே அன்றிலிருந்து 30 நாட்கள் 🔥அகண்ட தீப பூஜை🔥 என தினமும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் கடன் பிரச்சனைகள் தீரும்.மேலும் கடந்த 3-4 நாட்களாக நமக்காக இருந்த பண்டிகை இன்று பசு கன்றுக்குட்டி ஆடு போன்ற வாயில்லா ஜீவ ராசிகளுக்கும் நன்மை உண்டாக அவற்றை பூஜிக்க வேண்டும். நம்மை நம்பி உள்ளதாக நாம் நம்பி கொண்டிருக்கும் பசு ஆடு நாய் பூனை கோழி போன்ற பிராணிகளுக்கு இன்று உணவு அளிக்க வேண்டும்.அதனை இன்று துன்புறுத்த கூடாது. நமக்கு உதவும் பசுக்களை இன்று பூஜை செய்ய வேண்டும்.கோவர்த்தன மலையை தாங்கிய ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும்.அடுத்து கடைசி நாள் பண்டிகையாக வருகிற

🔥💠23-10-2025 வியாழக்கிழமை

யம துவிதியை💠🔥 சகோதரர்கள் அவர்தம் சகோதரிகள் அழைப்பை ஏற்று சகோதரிகள் இல்லம் சென்று சகோதரர்களுக்கு சகோதரிகள் கையாலே தலை வாழை இலையில் விருந்து உணவு கொடுக்க வேண்டும். இதற்கு ஒரு புராண கதை சொல்ல படுகிறது. அதன் படி யமனின் சகோதரியான யமுனா தன் அண்ணனான யமனை ஒரு நாள் உணவு அளிக்க பரிமாற அழைத்தார். ஆனால் யம லோகத்தில் சதா நேரமும் உயிரினங்களின் இறந்த பின்பு அதன் ஆத்மாக்கள் வந்த வண்ணம் இருந்ததால் அதனை கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.இதனால் சகோதரி யமுனைவின் அழைப்பை ஏற்று வர இயலாது போனது.இந்த சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் மூலம் நரகாசுரனை வதம் செய்த பின்னர் யம லோகத்தில் வரும் ஆத்மா எண்ணிக்கை குறையவே யமனுக்கும் வேலை குறைந்தது. 

அப்போது தான் தன் சகோதரியின் அழைப்பு ஞாபகம் வந்தது. உடனே யமுனையிடம் சென்று படையல் உண்டு விட்டு, இது போல் யார் ஒருவர் தன் சகோதரி கையால் இன்று உணவு உண்ணுகிறானோ அவர்க்கு நரக பயம் இல்லை என யமுனாவிற்கு வரமளித்தார். இவ்வாறு இன்று சகோதரர்கள் தன் வீட்டில் உணவு உண்ணாமல் தன் சகோதரி வீட்டில் உணவு உண்டு ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை பரிமாறி கொண்டு சந்தோஷமாக இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்.இனிய அட்வான்ஸ் தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%