
🌌🌌
ஒத்த குடிசையிலே
ஒரு மனம்;
ஒத்த படகிலே
ஒரு மனம்;
இரட்டை மனசும்
தலை பிரட்டை எனத்
தவித்துக் கிடக்குதே!
ஆலமரத்து ஊசலென ஊசலாடி கிடக்குதே!
அவள் மனசு;
அவள் அத்தையின்
மனம் போல்
ஏங்கித் தவிக்குதே!
அவன் வருகைக்காக
துடித்துக் கிடக்குதே!
கண்ணில் வெள்ளமென
கண்ணீர் தேங்கிக் கிடக்குதே!
வெறும் கடலை வெறித்துப் பார்க்கையிலே;
வெற்றுப் படகு
ஒன்று கண்ணில் படுதே!
சசிகலா விஸ்வநாதன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%