நெற்பயிரை தாக்கும் புகையான் பூச்சி வேளாண் அதிகாரிகள் விளக்கம்
Dec 10 2025
17
வேலூர் மாவட்ட வேளாண் அதிகாரிகள் நெல் பயிரை புகையான் பூச்சி தாக்கும் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தெரிவித்துள்ளனர். நெற்பயிரை புகையான் பூச்சி தாக்கினால் விளைச்சல் பாதிக்கும். பயிரின் அடிப்பாகத்தில் பூச்சிகள் மற்றும் குஞ்சுகள் காணப்படும். பயிர்கள் மஞ்சளாக மாறி பழுப்பு நிறமாகி கருகியது போல் தோன்றும். தாக்கப்பட்ட பயிர்கள் வலுவிழந்து சாயும், பால் பிடிப்பதில்லை, கதிர்கள் பாதிக்கும், வயலில் ஆங்காங்கே வட்ட வடிவமாக தாக்கப்பட்ட பகுதிகள் காணப்படும். நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்பூச்சிகள் ஒட்டி கொண்டிருக்கும். தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து தீய்ந்த மாதிரி காட்சியளிக்கும். இந்த பழுப்புத் தத்துப்பூச்சி புல்தழைகுட்டை நோய், காய்ந்த குட்டை நோய் மற்றும் வாடிய குட்டை நோய் ஆகியவற்றை பரப்புகிறது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?