பெரம்பூரில் ரூ.35 லட்சத்தில் பல்நோக்கு மையக் கட்டிடம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்தார்

பெரம்பூரில் ரூ.35 லட்சத்தில் பல்நோக்கு மையக் கட்டிடம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்தார்


சென்னை, அக்.18–


அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.34.90 லட்சம் மதிப்பில் திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்கில் ராஜீவ் காந்தி பூங்கா அருகில் சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தினை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, குழந்தைகள் மையத்தின் செயல்பாட்டினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.


பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:–


இன்று இந்த குழந்தைகள் மையக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டு, இங்குள்ள குழந்தைகளுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் முடிவுறும் நிலையில் உள்ளது.


மாமல்லபுரத்தில் கட்டப்படும் பேருந்து நிலையம் மற்றும் செங்கல்பட்டில் ரூ.200 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ஒரு பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் தைத்திங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


இதுமட்டுமில்லாமல் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் 13 எம்.டி.சி. பேருந்து நிலையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அம்பத்தூர், முல்லை நகர், உதயசூரியன் நகர் ஆகிய 3 பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு, இந்த மாத (அக்டோபர்) இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.


இந்நிகழ்வில் மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராஜன், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%