
சென்னை:
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம் பரம் தனது எக்ஸ் வலை தளப் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், “2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 258 பேர் உயிரிழந்தனர்; 1,108 பேர் காயமடைந்தனர்; 532 மத வழிபாடு இடங்கள் சேதமடைந்தன; 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர்; பல்லாயி ரம் பேர் அகதிகள் முகாம் களில் இன்றும் இருக் கின்றனர். இரண்டு ஆண்டுகளாகப் பிரதமர் மோடி மணிப்பூரைத் திரும் பிக் கூடப் பார்க்கவில்லை. சனிக்கிழமை மணிப்பூர் சென்ற மோடி, ஒரு வார்த்தைகூட வருத்தம் தெரிவிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக வராததற்கு மன்னிப்புக் கேட்கவில்லை. ரூ.7300 கோடி திட்டங்கள், ரூ.1200 கோடி திட்டங்கள் என்று கூறி மணிப்பூர் மக்களை விலைக்கு வாங்க முடி யுமா?” என வினவியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?