மனிதப்பிறவியின்மாற்றம்
இப்பிரபஞ்சத்தில்
"மாற்றம்"என்பதில் மனிதனுக்கு நல்லதுமுண்டு ! கெட்டதுமுண்டு !
இயல்பானதுமுண்டு ! இறுதியானதுமுண்டு !
அதில் பணத்தினால் வரும் "நிலைமாற்றம்" மனிதனை தன்னிலை மறந்து ஆடச்செய்கிறது ! இது "கெட்டதே"
அடிக்கடி பதவியாலும் பணியாலும் வரும் "இடமாற்றம்" என்பது சில மனிதனர்களின் மனதிற்கு சில சூழ்நிலையில் ! இது "நல்லதே"
வயதின் உடல்நிலையால் வரும் "தடுமாற்றம்" மனிதனாகப் பிறந்தால் அனைவருக்கும் வருமென்பதால் !
இது "இயல்பானதே"
மனிதப்பிறவியில்
காலத்தின் கோலத்தால்
சந்திக்கக்கூடிய "ஏமாற்றும் சில உறவுகள் "
"அன்பைக்காட்டி"
"ஆதரவுப்பேசி" நன்மைகள் அனைத்தையும் பெற்றுத்
தன்னிலையை உயர்த்தியப் பிறகு
"தூக்கி எரியும்" உறவுகள் "அன்பிற்கு" கிடைத்த "ஏமாற்றமே"
இது "கெட்டதே"
இத்தகைய மாற்றத்தில் நம் "பெற்றோர்" உற்றார் உறவினர்களை நாம் "இழக்கும்" போது "தடுமாற்றம்" "நிலைமாற்றம்"
"இடமாற்றம்" வந்தாலும் இதில் நாம் அடையும் "ஏமாற்றம்" தான் மனம் ஏற்க மறுக்கிறது ! வாழ்க்கை வெறுக்கிறது !
இந்த "ஏமாற்றம் "
இயல்பானதே !
இறுதியானதே !
இறைவனாலானதே !

அன்புடன்
G.A.கோவிந்தராஜ் (எ)சுரேஷ்குமார்
திருப்புவனம் புதூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?