கொங்கு மண்டலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அன்னூர் மன்னீஸ்வரர் என்ற சிவன் கோவில். சுமார்1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது
முன்பு காடாக இருந்த இந்த பகுதி வள்ளி வனம் என அழைக்கப்படுகிறது அன்னி என்ற வேடன் காட்டிலுள்ள மிருகங்கள் பறவைகள் இவற்றை வேட்டையாடி சாப்பிடுவது பாவம் என கருதினான்
எனவே அவன் காட்டில் உள்ள பழங்கள் காய்கறிகள் கிழங்குகள் சாப்பிட்டு வந்தான்
ஒரு சமயம் காட்டுப்பகுதியில் அவன் கிழங்கு தோண்டி எடுக்கும் போது அந்த இடத்தில் மிகப்பெரிய ஓசை கேட்டது அருகில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தார்கள் தோண்டிப் பார்க்க உள்ளே சிவபெருமான் சுயம்பு வடிவில் இருந்தார் மண்ணிலிருந்து எடுக்க எவ்வளவோ முயன்றார்கள் முடியவில்லை அருகில் இருந்த சேர மன்னனை அழைத்து வந்து மன்னரிடம் விஷயத்தை கூறினான்
மன்னர் தனது ஆட்களை அனுப்பி அந்த இடத்தில் பள்ளம் தோண்டி பார்க்கச் சொன்னார் அங்கே மிகவும் ஆழமான பகுதியில் ஒரு சிவலிங்கம் தென்பட்டது அதை எவ்வளவோ எடுக்க முயன்றும் அவர்களால் எடுக்க முடியவில்லை. உடனே மன்னன் அந்த சிவலிங்கத்தை சங்கிலியால் பிணைத்து யானைகளை கொண்டு இழுக்க செய்தான் அப்படி இருந்தும் சிவலிங்கம் வெளியே வரவில்லை
பின்னர் ராஜ குருவின் யோசனைப்படி அந்த இடத்தில் பூஜை பரிகாரங்கள் செய்தவுடன் சிவலிங்கம் வெளிப்பட்டது. தன்னை சங்கிலியால் பிணைத்து எடுத்த காரணத்தால் மன்னனை தண்டிக்காமல் மன்னித்து விட்டதால் இந்த சிவன் மன்னீஸ்வரர்
என அழைக்கப்பட்டார். அன்னி என்ற வேடன் மூலம் சிவலிங்க வெளி பட்டதால் இந்த ஊருக்கு அன்னூர் என பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிவபெருமான் சுயம்பு வடிவமாக மன்னனை மன்னித்ததால்
மன்னீஸ்வரர் என பெயர் பெற்றார்.
மன்னன் பாவங்களை போக்கியதால் இந்த கோவில் பாவங்களைப் போக்கும் பரிகார ஸ்தலமாக போற்றப்படுகிறது
மக்கள் பாவங்களைப் போக்குவதற்காக இந்த கோவிலுக்கு வருகை தருகிறார்கள். இந்த கோவிலுக்கு வந்தால் அவர்கள் செய்த பாவங்கள் நிவர்த்தி அடையும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது.
மூலவர் மன்னீஸ்வரர் உடன்
அருந்தவச்செல்வி அம்மன் என அழைக்கப்படுகிறார்கள். சுமார் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாக உள்ளது. கருடன் உயரத்திலிருந்து பறந்து கீழே உள்ள பொருட்களை துல்லியமாக பார்க்கும் திறன் உடையது. அதேபோன்று மனிதர்கள் செய்யும் பாவங்களை மன்னீஸ்வரர் கவனித்துக் கொண்டிருக்கிறார்
என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
இந்தக் கோவிலில் மன்னர்கள் பற்றிய 51 கல்வெட்டுகள் உள்ளது.
மன்னீஸ்வரர் கைலையில் உள்ளது போல் சுயம்புவாக காட்சி தருகிறார் இதுபோல் தமிழ்நாட்டில் வேறு எந்த கோவிலிலும் இல்லை அம்மன் அருந்தவ செல்விக்கு தனி சன்னதி உள்ளது
இவை தவிர சுற்று பிரகாரங்களில் பைரவர் குரு பகவான் நடராஜர் வள்ளி தெய்வானை சமேத முருகன் நால்வர் 63 நாயன்மார்கள் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். சனி பகவானுக்கும் காலபைரவருக்கும் தனி சன்னதிகள் உள்ளது.
மூலவராக எம்பெருமான் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இங்குள்ள சிவனை தரிசித்தால் ஆயிரம் லிங்கங்களை தரிசித்த பலன் கிடைக்கும்.
கருவறையில் உள்ள சுவாமி மணல் நிறத்தில் காணப்படுகிறார்.
லிங்கத்தின் இருபுறமும் கருடன் இறக்கை போன்று காணப்படுகிறது
இன்றும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மன்னன் சங்கிலியால் பிணைத்த தடமும் வேடன் கோடாலியால் வெட்டிய தழும்பும் காணப்படுகிறது
தொழில் வியாபாரம் செழிக்கவும் தங்களது பாவங்கள் போக்கவும்
ஏழரை சனி அஷ்டமி சனியலிருந்து
விடுபடவும் இந்த கோவிலுக்கு உள்ளூர் மக்கள் தவிர வெளியூரில் இருந்தும் நிறைய பக்தர்கள் வருகிறார்கள் அன்னூர் பேருந்து நிலையம் அருகிலேயே கோவில் அமைந்துள்ளது அனைத்து ஊர்களில் இருந்தும் கோவிலுக்கு வர பேருந்து வசதி உள்ளது மார்கழி பிரமோற்சவம்
சித்திரை வருடப்பிறப்பு வைகாசி
பூஜை மகா சிவராத்திரி திருக்கார்த்திகை அம்மாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது
இந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு
அவர்கள் செய்த உன் ஜென்ம பாவ தோஷங்கள் நீங்க 21 தீபம் ஏற்றி 21 முறை கோவிலை சுற்றிவர தோஷங்கள் நிவர்த்தியாகும். முருகப்பெருமானுக்கு கார்த்திகை தோறும் தனியாக கோவில் உட்புறத்தில் தேர் ஓடும் தேரில் முருகர் பவனிப்பார் முருகனுக்காக தற்போது தங்கத்தேர் செய்யும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் சிவபெருமானுக்கு விநாயகருக்கும் இரண்டு தேர் உள்ளது சிறப்பாக தேர் திருவிழா நடைபெறும் இந்த மார்கழி மாதம்16 டிசம்பர் 31 2025 அன்று மிகச் சிறப்பாக தேர் திருவிழா நடைபெற உள்ளது அனைத்து பக்தர்களும் வந்து
மன்னீஸ்வரர் தேரை வடம் பிடித்து இழுத்து இறையருள் பெறுக

பொன்விழி
அன்னூர்