மேகம் தாளம் போட, வருணன் பாடல் பாட
பூமியில் மண்ணின் வாசம் தெரிய,
மழை ஆரவாரத்துடன் வந்ததே ..
நந்தவனத்துச் செடிகளின் மீது உள்ள
இலைகளை நனைக்க ரம்யமான காட்சியானது,
சொட்டும் மழை சங்கீதமாக ஒலித்தது
தார் சாலை நனைந்ததால் கண்ணாடி போல் பளபளத்ததே....
தென்றல் கிசுகிசு என்று மழையோடு காதல் மொழி பேசியதே
குடைப்பிடித்த கரங்கள் தாளம் போட.... குடையின் மீது சொட்டிய தண்ணீர் இசை போல காதில் ஒலித்ததே...
மழை வந்தால் ஆரவாரம் என்றாலும்....
மனதுக்குள் சந்தோச ஆரவாரம் ஒலிக்கிறது
மழையை ரசிப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்...
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%