முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி சென்னை மாநகரில் 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு சீரான போக்குவரத்து

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி சென்னை மாநகரில் 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு சீரான போக்குவரத்து



சென்னை, அக். 23–


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை மாநகரில் 22 சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீரான போக்குவரத்து பராமரிக்கப்பட்டுள்ளது.


நேற்று (22–ந் தேதி) காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை சராசரியாக 4.66 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 18.30 மி.மீ. மழைப்பொழிவும் (பெருங்குடி மண்டலம்), குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 0.30 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.


தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் நேற்று (22–ந் தேதி) 68 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, 1,48,450 பேருக்கு காலை உணவும், 76 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 2,20,950 பேருக்கு மதிய உணவும், 15சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 27,000 பேருக்கு இரவு உணவும், என மொத்தம் 3,96,400 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.


சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 454 குடிநீர் வாகனங்கள் வாயிலாக சராசரியாக 3,500 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 106 சமையல் கூடங்கள் மற்றும் 215 வெள்ள நிவாரண மையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


விழுந்த மரங்கள்:


உடனடியாக அகற்றும் பணி


மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகளும், 150 எண்ணிக்கையில்100 எச்.பி. மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகளும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


17–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை மழையின் காரணமாக விழுந்த 24 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன.


சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணிற்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் தொடர்பான புகார்களை 1916 என்ற உதவி எண்ணிற்கும் கட்டணமில்லாமல் 24 மணி நேரமும் தெரிவித்து தேவையான உதவிகளை பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%