வாசகர் கடிதம் (ஆ.ராமகிருஷ்ணன்) 14.09.25

வாசகர் கடிதம் (ஆ.ராமகிருஷ்ணன்) 14.09.25



நேற்றைய வாசகர் கடிதம் பகுதியில் தென்காசி வாசக சொந்தம் வெங்கடாசலபதி அவர்கள் இலவசம் பற்றி எழுதியிருந்தது அருமை.


இந்த எண்ணம் தமிழ் நாடு இ பேப்பரை வாசிக்க ஆரம்பித்த

முதல் நாளில் இருந்தே 

அடியேன் மனதில் அரித்துக் கொண்டே இருந்தது.


இரண்டு ஆண்டுகளுக்கும்

மேலாக தமிழ் நாடு இ பேப்பரோடு ஆனந்த பாஸ்கர், பல்சுவை களஞ்சியம், சிறுவர் உலகம் என்று பல்வேறு அம்சங்களை 

வாசக சொந்தங்களுக்கு இலவசமாக அளித்து வரும் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தினர் 

நண்பர் குறிப்பிட்டு சொன்ன கருத்தை 

கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.



வாசக நண்பரின் விருப்பத்தை ஏற்று சந்தா அறிவிப்பை 

தமிழ் நாடு இ பேப்பர் 

அறிவித்தால்,

தமிழ் நாடு இ பேப்பரின் பொறுப்பு மிக்க அன்பான --

பண்பான வாசக பெருமக்கள் அனைவரும் தவறாமல் ஆதரவு அளித்து உற்ற துணையாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


நல்ல காரியத்திற்கு 

ஆண்டவன் அருளும் 

கட்டாயம் உண்டு.


தமிழ் நாடு இ பேப்பர் 

என்றென்றும் மார்க்கண்டேய வரம் 

பெற்ற இளமைப் பொலிவோடு சிறந்தோங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


குன்றா அன்புடன்

ஆ.ராமகிருஷ்ணன்

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%