வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 12.12.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 12.12.25



நாட்டில் ஊடுருவல் காரர்களை அனுமதிக்க முடியாது என அமித்ஷா அறிக்கை. என் வாக்குச்சாவடி வெற்றி உறுதி என ஸ்டாலின் நம்பிக்கை. 

2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என பழனிச்சாமி அறிவிப்பு. 

உள்ளூர் செய்திகள் அனைத்தும் தரமாக உள்ளது. வேகன் உணவு முறை சிறந்த விழிப்புணர்வு கட்டுரை. 

சென்னை விமான நிலையத்தில் விமான கட்டணங்கள் குறைக்கப்பட்டது . சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை கவர்னர் ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி உளளார். கூகுள் மேப்பில் உள்ள வண்ணக்கோடுகள் எதை குறிக்கிறது என்ற கட்டுரை பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. 

இன்றைய தினம் கவிதைகள் அனைத்தும் சூப்பர் ரகம். 

கோரையாறு நீர்வீழ்ச்சி கட்டுரை சிறப்பாக இருந்தது. வால்பாறை சுற்றுலா பற்றிய கட்டுரை பல புதிய தகவல்களை அறிய முடிந்தது. 

பழனி முருகன் கோவிலில் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அதிகாரிகளை யாரும் விரட்ட கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. உலக அளவில் யு பி ஐ பரிவர்த்தனை முதலிடத்தில் உள்ளது. சபரிமலையில் ஒரே நாளில் 95 பாம்புகள் பிடிபட்டுள்ளது. 

இந்தியா பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என ட்ரம்ப் தம்பட்டம் அடித்து வருகிறார். 

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதை எப்படி வீடு வீடாக சென்று பார்ப்பார்கள் தெரியவில்லை. 


காதல் கவி முரசு காதல் கவிதைகளின் வேந்தன் முத்து ஆனந்த் அவர்கள் எழுதியுள்ள காதல் கவிதை 

காலத்தால் அழிக்க முடியாத காவியம் 

நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் சார். 


இன்றைய தினம் வெளியான உள்ளூர் செய்திகள் ஆன்மீக செய்திகள் சுற்றுலா செய்திகள் சிறுவர் பகுதி மற்றும் மருத்துவ பகுதி கவிதைகள் அனைத்தும் நல்ல முறையில் தொகுக்கப்பட்டு வழங்கி இருப்பது பாராட்டுக்கு உரிய செயல் ஆகும்

 

தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம். இடையில் சில நாட்கள் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் எழுத இயலவில்லை. 

மீண்டும் நாளை சந்திப்போம். 


நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%