
சோளீஸ்வரர் கோவில்
அபிஷேகத்திற்கு மோடி கங்கை நீரை
கொண்டு வந்தார். பாராட்டத்தக்க
செயல். உலகின் தலைசிறந்த
தலைவர் மோடி என மார்னிங் கன்சலட்
நிறுவனம் புகழாரம். எனக்கு
முதல்வராகும் தகுதி இல்லையா
என திருமாவளவன் ஆதங்கம்.
ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன்
இருவருக்கும் பெரிய சிலைகள்
நிறுவப்படும் என மோடி அறிவிப்பு.
முதலில் ராஜராஜ சோழன்
இறந்து புதைக்கப்பட்ட இடத்தை
சீர்படுத்தி கட்ட வேண்டும்.
ராஜேந்திர சோழன் காலத்தில்
ஏற்படுத்தப்பட்ட செப்பேடுகள்
தற்போது நெதர்லாந்து மியூசியத்தில்
உள்ளது. அதையும் கொண்டுவர
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் அப்பல்லோவில் இருந்து
டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
தெரு நாய்களை கருணை கொலை
செய்ய தமிழக அரசு முடிவு.
தயவுசெய்து அதை விரைவாக
செய்து முடிக்க வேண்டும்.
மத்திய கைலாஷ் பகுதியில்
அனைவரும் சொந்தமாக கார்
வைத்து இருப்பதால் போக்குவரத்து
நெருக்கடி ஏற்படுகிறது.
மனிதத் தவறுகள் தான் ரயில்
விபத்துக்கு
காரணம் என ரயில்வே அமைச்சர்
பேட்டி. முத்து ஆனந்த் அவர்களின்
நான் ஆசைப்பட்டால் காதல் கவிதை
படிக்கப் படிக்க தெவிட்டாத காதல்
கவிதையாக உள்ளது. ரிஷி வந்தியா
அவர்களின் கிரீடம் கவிதை
சூப்பர் ரகம். தேங்காய் எண்ணெய்
லிட்டர் ஒன்றுக்கு 560 ஆக உயர்ந்து
உள்ளது. அமெரிக்காவில் உள்ள
நாசா நிறுவனம் 4000 ஊழியர்களை
பணி நீக்கம் செய்துள்ளது.
ஆட்குறைப்பு என்ற பெயரில்.
வெளிநாட்டு சிறைகளில் 11 ஆயிரம்
இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு
அறிவிப்பு. வாக்காளர்கள் திருத்தம்
செய்ய ஆதார் அட்டையை
அடையாளமாக எடுத்துக் கொள்ள
வேண்டும். சுந்தர் பிச்சை உலக
கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்
பிடித்துள்ளார். தாய்லாந்து
கம்போடியா இடையே போர்
தீவிரமடைகிறது. வழக்கம்போல
கவிதைகளும் கட்டுரைகளும்
மிகச் சிறப்பான முறையில்
வெளியிட்டு வாசகர்களை
மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறது
தமிழ்நாடு இ பேப்பர் .
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?