வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர் இடையே பாலக்காடு எக்ஸ்பிரஸ் அக்.22,23 தேதிகளில் ரத்து

திருநெல்வேலி, அக்.19- நெல்லை ரெயில்வே பணிமனையில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 22, 23 தேதிகளில் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. நெல்லை வழியாக செல்லும் பாலக்காடு-திருச்செந்தூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண் 16731) வரும் 22, 23 தேதிகளில் வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது காலை 6.10 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் இந்த ரெயில், குறிப்பிட்ட 2 நாட்கள் வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்தப்படும். மேலும் இந்த 2 நாட்கள் வாஞ்சி மணியாச்சியில் இருந்தே மதியம் 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?