விருதுநகர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 30 ந்தேதி வரை நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை
Sep 19 2025
44

விருதுநகர், செப்.17–
2025-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (ஸ்பாட் அட்மிஷன்) 30.09.2025 வரை சேர்க்கை நடைபெறுகிறது.
எனவே ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மற்றும் மாணவிகள், அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு கீழ்க்கண்ட அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது. மாதாந்திர உதவித்தொகை ரூ.750- வழங்கப்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- உதவித் தொகை வழங்கப்படும்.
ரூ.1000 உதவித்தொகை
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும். மேலும், 2 செட் சீருடை தையற்கூலியுடன் வழங்கப்படும், பாடநூல்கள் மற்றும் வரைபடக்கருவிகள் வழங்கப்படும், விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும், மூடு காலணி வழங்கப்படும், கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும், அடையாள அட்டை வழங்கப்படும், தேர்வுக்கு கட்டண விலக்கு வழங்கப்படும்.
மேலும், பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில், வளாக நேர்முகத்தேர்வு நடத்தி (கேம்பஸ் இன்டர்வியூ) மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஊதியம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை தொழிற்நிறுவனங்களின் தகுதி நிலைக்கேற்ப வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட கலெக்டர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?