வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக ரூ.1.35 கோடி மோசடி

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக ரூ.1.35 கோடி மோசடி



மூவர் மீது வழக்கு தஞ்சாவூர், பிப்.1 - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு கிராமத் தைச் சேர்ந்தவர் ஆர். விமல். இவர் வெளிநாட் டுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருந் தார். இவரது நண்பர் ஒரு வர் மூலம் சென்னையைச் சேர்ந்த பிரசன்னா அறி முகம் ஆனார். பிரசன்னா கனடா, நியூ சிலாந்து ஆகிய நாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாகவும், அங்கு மாதம் பல லட்சம் சம்பளத்தை இளைஞர்கள் வாங்கி வருவதாகவும் ஆசை வார்த்தை கூறியு உள்ளார். இதை நம்பிய விமல் மற்றும் 57 பேர் பிரசன்னா, அவரது மனைவி வசுமதி மற்றும் ரித்தீஷ் ஆகியோரிடம் சென்னைக்கு சென்று, கடந்த 2.5.2024 முதல் 20.12.2024 வரை ரூ.1,35,55,000 பணத்தை கொடுத்துள்ளனர். அதன்பிறகு பணம் கொடுத்தவர்கள் வெளி நாட்டுக்கு எப்போது அனுப் புகிறீர்கள் என கேட்ட போது, பிரசன்னா முறை யாக பதில் அளிக்காமல், பணம் கொடுத்தவர்களை மிரட்டியுள்ளார். இதை யடுத்து விமல் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுப்பிர மணியன், பிரசன்னா உள்ளிட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%