ஹிமாச்சலில் நிலவும் கடும் பனிப்பொழிவால் 1250 சாலைகள் மூடல்; சுற்றுலா பயணிகள் தவிப்பு
Jan 28 2026
27
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக, 1250 சாலைகள் முற்றிலும் மூடப்பட்டு உள்ளன. அங்கு தற்காலிகமாக போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது.
முன் எப்போதும் இல்லாத அளவு ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. குளிர்கால சொர்க்கமாக மாறிவிட்டதாக கூறப்பட்டாலும், மணாலியில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறுகள் சுற்றுலா பயணிகள் ,இடையே தவிப்பை உருவாக்கியது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து காட்சியளித்தன.
இந் நிலையில், அங்கு தொடர்ந்து பனி பெய்து கொண்டே இருப்பதால் சாலைகளில் போக்குவரத்தை தொடரமுடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அம்மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1250 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அவை மூடப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது;
2 நாட்களாக பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் 1250 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. அவற்றை மீண்டும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தப்பட்டு பனி அகற்றப்பட்டு வருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?