ஹைக்கூ

ஹைக்கூ

ஹைக்கூ கவிதைகள்:


மகளின் பரதத்தில் அழகை


கண்ட - அவள் மறந்தது


தான் ஆடிய அபிநயங்களை!!!



💗டென்ஷனின் எதிர்ப்பதம் நான் தான் 


எனக் கூறியவளின்-கைப்பிடித்து


என் டென்ஷனே- நீதான் 


என்றான்!!!



💗 நேர்த்தியாக ஆடை அணிந்தாலே- நாட்டில்


பிரச்சனை வராது- எனக் கூறி 


அரை ட்ராயருடன் வெளிப்பட்டான்!!!



💗கள்ளத்தனத்தை அழகாக - காட்டிக் கொடுத்தது


 அவளின் பாத கொலுசு!!!


💗பல வகை இரைச்சலிலும்


வசதியாக தூங்க -பதறி


எழுந்தாள்- தன் குழந்தையின் 


மெல்லிய சினுங்கலில்!!!



💗 மக்கள் அனைவரும் மிக


கவனமாக - மடியினில்


குழந்தையை போல் 


மடிக்கணினி!!!



எதிலும் கிடைக்காத தெம்பு 


தன் கைப்பையில் உள்ள 


பணம் மூலமாக கிடைத்தது - அவளுக்கு!!!



💗 தங்கம் விலை ஏறுவது


    போல் ஏறுகிறது - அவளின் ரத்த அழுத்தம் 


அவனை கண்டவுடன்!!!



💗அழகாய் கத்தி அழைத்த - நடத்துனர் 


மிக அமைதியாக கடக்கிறார் - மகளீர் கல்லூரியை கண்டவுடன்!!!



பானு ஶ்ரீ 

பாண்டிச்சேரி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%