ஹோலி பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம் கோவை, பிப்.18- ஹோலி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மற்றும் பீகார் மாநிலம் முசாபர்பூர் இடையே கோவை வழியாக 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ள தாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் வெளியிட்ட செய்திக்கு றிப்பில் கூறியதாவது, எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் இரவு 09.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் (06085) புறப்படும். இந்த ரயில் சனிக்கி ழமை அதிகாலை 02.27 மணிக்கு கோவை ரயில் நிலை யத்தை வந்தடைந்து, 02.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். தொடர்ந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட் டை வழியாக திங்கட்கிழமை காலை 07.30 மணிக்கு முசா பர்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக, முசாபர்பூரில் இருந்து பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரை திங்கட்கிழமை தோறும் இரவு 09.15 மணிக்கு இந்த சிறப்பு ரயில் (06086) புறப்படும். இந்த ரயில் வியா ழக்கிழமை அதிகாலை 03.47 மணிக்கு கோவை ரயில் நிலை யத்தை வந்தடைந்து, 03.50 மணிக்கு புறப்பட்டுச் சென்று காலை 10.30 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?