*எண்ணித் துணிக கருமம்*!

*எண்ணித் துணிக கருமம்*!



நேரிசை வெண்பா!


எப்படிச்

செய்வதென்றே

ஏற்றமுடன்

ஆய்ந்திட


அப்படியே

செய்தால்

அழகேதான்...

தப்பின்றிக்


காணுமே

அச்செயல்

கண்ணிய

மாகவே


பேணிடு

நற்செயல்

பீடு!



செயலைத்

தொடங்குமுன்

சீர்மைக்

குணமாய்


நயன்மையுடன்

நன்றேதான்

செய்க...

வியப்பளிக்கும்


அச்செயல்

என்றுமே

அன்பும்

கலந்திருப்பின்


இச்சையுடன்

காணும்

இனிது!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%